குன்னூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 67ம் ஆண்டு தீமிதி திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாலகொலா ஊராட்சியில் ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மே 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது.
ஆனால் இதற்கு முன் இருந்தே பெரும்பாலான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, மே 5ம் தேதி காப்புகட்டி நேற்று மாலை தீ மிதித்துள்ளனர். தீ மிதியில் இறங்கிய அனைத்து பக்தர்களும் பக்தி பரவசத்துடன் சாமி ஆடி, தீ மிதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அன்னதானமும், இன்னிசை கச்சேரிகளும் நடந்தன. இதில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாகவும், விழா தொடங்கி விட்டது என்று தெரிய படுத்தும் விதமாக, தொடர்ந்து ஒரு மணி நேரம் வான வேடிக்கைகள் வெடித்துள்ளனர்.
இன்று காலை 9 மணிக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழாவும், மாவிளக்கு பூஜையும், அன்னதானமும், நடைபெற்றது. இதனை குன்னூர் சுற்றியுள்ள 9 கிராம மக்களும் சேர்ந்து செய்துள்ளனர்.
பின் அம்மன் பூ அலங்காரத்தில், தேர் மீது ஏறி மக்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். மாலை அனைவரும் தரிசனம் செய்து வழிபட்டுள்ளனர்.
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி