தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
2003-04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.44,000 கோடியாக உயர்ந்துள்ளது.
2021-22ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,050 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.8,000 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுபான கடைகள் குறித்து இந்தியா முழுவதும் கொள்கை முடிவெடுத்தால் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.