ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி சென்றது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை 10 மணி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி நிலையில் அதை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் ஆளுநர் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த வேளையில் டெல்லி செல்லும் ஆளுநர் ரவி மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் சந்தித்து இது குறித்த ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் தமிழக அரசில் நிலவர்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளன.இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் ரவி நாளை இரவு மீண்டும் சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post