வட இந்தியர்கள் பிடியில் சிக்கி கொண்ட தமிழ்நாடு..!! தமிழர்கள் சிந்திக்க வேண்டியது இதை மட்டும்..!!
ஓஎம்ஆர் ரோட்டின் தெரு ஓரத்தில் பானி பூரி கடைக்கார பையன் பானி பூரி விற்றுக்கொண்டு இருந்தான்.. வருடத்தின் 365 நாளும் அவன் அங்கேயே நின்று வியாபாரம் செய்து வந்துள்ளான்.
நானும் என் மகளும் அவனிடம் பலமுறை பானி பூரி சாப்பிட்டுள்ளோம்.., அவன் ஒரு பெரிய கூடை நிறைய பானி பூரி கொண்டுவந்து முழுசும் காலி செய்துவிட்டு தான் வீட்டிற்கு செல்வான். எவ்வளவு சம்பாதிப்பாய் என்று கேட்டேன்.., தினமும் 4000 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று சொன்னான்.
நான் பொறாமை படுவேன் என்று குறைவாக சொல்கிறான். நிச்சயமாக 10,000 தாண்டும். ஏனென்றால் நான் சென்ற ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன்.. ஒரு 10 நிமிடத்துக்குள் 400 ரூபாய் சம்பாதிக்கிறான். எந்த ஊர் என்று கேட்டேன்..? உத்திரபிரதேசம் என்றான் ..
உத்திரபிரதேசத்தில் இருந்து இங்கே வந்து அரைகுறை தமிழை கற்றுக்கொண்டு பானி பூரி விற்பவன் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்,வேலைக்கு வருபவர்கள் எல்லோரும் பொதுவாக வட இந்தியர்கள் என்று சொல்லி விடுகிறோம்.
பாதிக்கும் மேற்பட்டவர்கள் தொழில் செய்கிறார்கள். அதே அளவு நம் மக்கள் எங்கேயோ தினக்கூலிக்கு சென்றுகொண்டு, கடன் வாங்கிக் கொண்டு.. டாஸ்மார்கில் கண்ட நேரத்தில் சரக்கு வாங்கி குடித்துக்கொண்டு காலம் கடத்துகிறார்கள்
நான் இதுவரை மூன்று அலுவலகம் சென்னை கோவையில் உருவாக்கி இருக்கிறேன், அதற்கு தேவையான மரம், இரும்பு, எலெட்ரிக்கல் லைட்டு, பல்பு , என மொத்தம் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். மொத்தமும் வட இந்தியர்கள் தான். எனது பணம் முழுவதும் வடநாட்டுக்கு போய்விட்டது. நான் ஒரு சின்ன பிசினெஸ் மேன்,
எனக்கே இவ்வளவு என்றால் பல நூறு கோடியில் கட்டிடம் கட்டும் பில்டர்ஸ்களை நினைத்து பார்த்தால் பணம் எவ்வளவு..?
அதேபோல விவசாய பொருட்கள் அரிசி , பருப்பு , வெங்காயம் , உருளைக்கிழங்கு , கோதுமை மொத்தமும் வடநாடு வீட்டுக்கு தேவையான மளிகை உட்பட மொத்த பொருட்களும் வடநாடு, ஜவுளி மொத்தமும் வடநாடு தான். இதுதான் இன்றைய நிலை.
தமிழ்நாடு மொத்தமாக வட இந்தியர்கள் பிடியில் சிக்குகிறது. இதை பொறாமை குணத்தோடு சொல்ல வில்லை.., அவர்கள் திருடி பிழைக்க வில்லை, ஏமாற்று செய்து பிழைக்க வில்லை..
உழைத்து தொழில் செய்து பிழைக்கிறார்கள்…
அவர்களால் நமக்கு எதுவும் பாதிப்பு இல்லைதானே..? அவர்களை விடுவோம். அரசியல் வாதிகள் தமிழ்நாடு, தமிழன் என்று சொல்லி அரசியல் வாதிகள், கூத்தாடிகள் மக்களை கேனையர்கள் ஆக்கி தெருவில் அலைய விடுகிறார்கள். மொத்தத்தில் நம் பெரும்பாலான தமிழர்கள் இன்றைய வயிறு நிரம்பினால் போதும் என்று வாழ்கிறார்கள் என்பதே நிதர்சனம்..
என்னுடைய கேள்வி என்னவென்றால் 5000, 10000 என்று சம்பளத்துக்கு வேலை தேடி அலையும் தமிழர்கள் ஏன் சொந்த தொழில் தொடங்க கூடாது..?
படிப்பறிவு இல்லாத வடக்கன் செய்யும் தொழிலை மெத்த படித்தேன், MBA படித்தேன், MCA படித்தேன், PhD படித்தேன், என சொல்லிக் கொண்டு திரியும் நீங்க ஏன் செய்ய கூடாது..?
வேலை கொடு, வேலை கொடு என்று ரெஸ்யூம் என்கிற திருவோட்டை தூக்கி கொண்டு அடுத்தவன் கிட்ட போய் ஏன் கையேந்த வேண்டுமா.?
நீங்களே ஏதாவது ஒரு சொந்த தொழில் தொடங்கலாமே..? சிந்தியுங்கள் சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே..