அதிமுக மீது பாய்ந்த மோடி..!! ஜெயலலிதா கேள்விக்கு திக் திக்…!!
அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் இருந்தே பிரதமர் மோடி அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்தியுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் மறைந்த தலைவர்கள் ஜெயலலிதாத மற்றும் விஜயகாந்த் அவர்களை புகழ்ந்து பேசி வாக்கு சேகரித்து வருகிறார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி அதிமுகவை அட்டாக் செய்யவில்லை.
இந்த நிலையில்தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், அதிமுகவை தாக்கி பேசி உள்ளார். எங்கள் கூட்டணியில் இல்லாத விஷயத்தை வேறு மாதிரி பார்க்க வேண்டும். 1995ல் ஜெயலலிதா அம்மா உடன் எனக்கு தொடர்பு இருந்தது உண்மை அவர் எனக்கு நல்ல நண்பர். அதன்பின் எனக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.
2002 தேர்தலுக்கு பின் பாஜக ஆட்சி மீது குற்றச்சாட்டுகள் எழ ஆரமித்தது, அந்த சமயத்தில் தான் ஜெயலலிதா நான் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பல கட்சிகள் என் மீது விமர்சனம் செய்ய தொடங்கியது. ஆனால் அதை பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை என்னை வந்து சந்தித்தார் எனக்கு ஆதரவு கொடுத்தார்.
இதனால் அதிமுக நிர்வாகிகளுக்கு என் மீது கோபம் இருந்தது, சில சமயங்களில் அதிமுக நிர்வாகிகள் எங்களுக்கு எதிராக செயல்பட ஆரமித்தனர். காரணம் கூடவே இருந்து குழிபறிக்க நினைத்த கயவர்களின் எண்ணம். ஜெயலலிதா அவர்களின் கனவை சிதைக்கும் எண்ணம் அது அவர்களுக்கு ரத்தத்தில் ஊறிவிட்டது. உடன் இருப்பவர்களுக்கு செய்யும் துரோகம் பாவம் செய்வதற்கு சமம். எனக்கு துரோகம் செய்யும் குற்றவுணர்ச்சி அதிமுகவினருக்குத்தான் வர வேண்டும். பாஜகவினருக்கு எந்த வருத்தமும் வர வேண்டியது இல்லை.
பாஜக கூட்டணி இங்கே வலுவாக இருக்கிறது. பல சமுதாய குழுக்களை உள்ளடக்கிய கூட்டணி இந்த கூட்டணி. மலர் செண்டு போல நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதுதான் எங்களின் பலம். மக்கள் எங்களுக்கு அளிக்கும் வாக்கு நேர்மறையான வாக்கு. பாஜகவிற்கு மக்கள் வாக்கு அளிக்க கூடாது என்பதற்காகவே சில சதி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.
பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களின் தேவைகள் மட்டுமின்றி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். முக்கியமாக பெண்களுக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல திட்டங்கள் இந்தியாவிற்கு வரவுள்ளது.
பாஜகவிற்கு ஆதரவாக மக்கள் திரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் கூட தற்போது மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள், அதற்காக தமிழகம் முழுவதும் சின்ன இயக்கங்கள் தொடங்கி உள்ளோம். இதில்தான் . ஜெயலலிதா அவர்களின் கனவை சிதைக்கும் சில பாவம் செயல்களை அதிமுகவினர் செய்து வருகிறார்கள்.
இந்த பாவ செயலை செய்ய வருந்த வேண்டியது அதிமுக தானே தவிர பாஜக இல்லை. இதை மோடி சொன்னவுடன் ஜெயலலிதாவின் கனவு தான் என்ன..? அப்படி பட்ட துரோகி யார் என கேள்விகள் எழுப்பட்டது.
பெரும் விவாதங்களுக்கும் மோதலுக்கும் பின்னரே அதிமுக பாஜக கூட்டணி பிரிந்தது. அதையடுத்து எடப்பாடி பழனிசாமி அப்போது அளித்திருந்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என சொல்லிவிட்டு சில அதிமுக நிர்வாகிகளுடன் பாஜகவை விட்டு வெளியேறினார்.
வருகின்ற லோக்சபா தேர்தல் 2024ல் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளாது அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்து விட்டது. இனி இதை பற்றி யாரும் பேச வேண்டாம் என கூறினார்.
அதன்பின் இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தனியாக கூட்டணி அமைத்தும், பாஜக தனியாக கூட்டணி அமைத்தும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் களத்தில் அதிமுக – பாஜக தலைவர்கள் இடையே பெரும் போரே நடந்து கொண்டிருக்கிறது என சொல்லலாம்.
பல்வேறு மேடைகளில் முன்னாள் முதல்வர் அதிமுகவின் மறைந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி நினைவு கூர்ந்து பேசினாலும் கூட, அதிமுக – பாஜக என்னவோ தேர்தல் களத்தில் மோதிக்கொண்டுதான் இருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவு, ஜெயலலிதாவின் மறைவிற்கு என்ன காரணம் என கேட்டதற்கு அதற்கான பதில் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும். இதற்கான பதில் என்னிடம் இல்லை என கூறி பேட்டியை முடித்துள்ளார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..