கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளி அருகே செல்வம் என்பவம் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு சந்திரமணி என்பவர் தனது பேண்டை ஆல்டர் செய்ய கொடுத்துள்ளார். அப்போது, செல்வம் தைத்து கொடுத்த விதம் சந்திரமணிக்கு பிடிக்கவில்லை. இதனால், டெய்லர் செல்வத்திற்கும் சந்திரமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், சந்திரமணி சிறிது நேரம் கழித்து மீண்டும் டெய்லர் கடைக்கு வந்து செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கடையிலிருந்த கத்திரிக்கோலால் செல்வத்தை சரமாரியாக குத்தினார் . இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
செல்வம் இறந்து போனதையடுத்து சந்திரமணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிரமாக விசாரணை செய்னர். பின்னர், சந்திரமணியை கைது செய்தனர். துணி தைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது