ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் ஆலயத்தில் 5 நாள் மட்டுமே நிகழும் அதிசயம்…!!
அரியலூர் – காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அதிசயம் காட்சி நிகழ்ந்தது.
கோவில் கோபுரங்களின் மீது இயல்பாகவே சூரியஒளி படுவது வழக்கம். ஆனால் ஒரு சில கோவில் கருவறைகள் மீது மட்டுமே சூரியஒளி படுவது ஆச்சரிய நிகழ்வு என சொல்லலாம். அப்படி தான் இந்த கோவில் கருவறை மீதும்.
அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி கிராமம் காவிரி கரையோரம் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படுமாம். இந்த அபூர்வ நிகழ்வு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நிகழும் என்பது அதிசயம்.
இந்த ஆலயத்தில் மட்டுமே சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுவது ஏன் தெரியுமா..?
ஆகஸ்டு மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரியபகவான் வலம் வந்து ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஈசனை வழிபட்டதாக புராணங்கள் சொல்லுகிறது.
அந்த புராண கதைகளின் படி இன்று காலை அந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது. சூரியனிலிருந்து வெளிப்படும் பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது.
இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது. இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர்.சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு சென்றனர். காண கிடைக்காத இந்த அரிய நிகழ்வு இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.