2ஆண்டுகள் சும்மா இருந்த சுந்தர் சி..! குஷ்பு வெளியிட்ட பதிவு..! சோகத்தில் ஆழந்த ரசிகர்கள்..!!
சுந்தர் சி திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மணிவண்ணணிடம் முறை மாமன் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருந்தார். பின்னர் தலைநகரம் படத்தை இயக்கி நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் பல ஹிட் படங்களை உருவாக்கினார். அந்த வரிசையில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த அரண்மனை 4 பாகம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த குஷ்பு வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி ஆனார். 90களின் கனவு கன்னியான இவர் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடித்த சின்ன தம்பி திரைப்படம் மக்களால் பெரிதும் வரவேற்றக்கப்பட்ட கதாபாத்திரம்.
இயக்குநர் சுந்தர்.சி நடிகை குஷ்பூவை 5வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குஷ்பு தற்போது அன்பே சிவம் படம் குறித்து பேசியுள்ள வீடியோ ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2003ஆம் ஆண்டு வெளிவந்த அன்பே சிவம் படு தோல்வியை சந்தித்தது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதை ரசிகர்களை கவராமல் இருந்ததால் படம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் குஷ்புவிடம் இந்த படத்தை ரீரிலில் செய்ய சொல்லி கேட்டு வருகின்றனர்.
ஏற்கனவே வெளியான திரைப்படங்களை தற்போது ரீரிலிஸ் செய்வது ட்ரெண்டாகி உள்ளது. அந்த வகையில் அன்பே சிவம் ரீரிலிஸ் குறித்து கேட்ட ரசிகர்களுக்கு குஷ்பு அதெல்லாம் செய்யமுடியாது என்று பதில் அளித்துள்ளார்.
2ஆண்டுகள் சும்மா இருந்த சுந்தர் சி :
இந்த படம் ரிலீசான சமயத்தில் தியேட்டரில் போய் பார்த்து வெற்றி பெற வைத்திருந்தால் என் கணவர் 2 வருடங்கள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டாரு. ஆனால் எது நடந்தாலும் நன்மை என சொல்வோம். அந்த மாதிரி அன்பே சிவம் ஓடவில்லை என்றாலும் நன்மைக்கே என எடுத்து கொண்டோம்.
ஏனென்றால் அப்படத்திற்கு பின் நாங்கள் எங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி கிரியேஷன்ஸை துவங்கினோம். அன்பே சிவம் மட்டும் ஓடியிருந்தால் நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கவே மாட்டோம் என குஷ்பு குறியுள்ளார்.
குஷ்புவின் பதிலால் இனி அன்பே சிவம் திரைப்படத்தை மீண்டும் திரையரங்கில் பார்க்க முடியாது என்ற ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
– பவானி கார்த்திக்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..