கரூரில் மினி மாரத்தான் மாணவியர்கள் பங்கேற்பு..!!
கரூரில் பெண் குழந்தைகளை காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வகையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் மாணவியர்கள் பங்கேற்பு
பெண்குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொள்வது.., வயதிற்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவது என இன்று வரை ஒரு சில கிராமங்களில் கடைபிடித்து வருகின்றனர். முக்கியமாக பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை.., இந்த செயல் மாற்றத்திற்காவும் மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காகவும்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
இந்த மினி மாரத்தான் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவியர்கள் மட்டும் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரி வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மினி மாரத்தான் போட்டியை நிறைவு செய்தனர்.
சுமார் மூன்று கிலோ மீட்டர் அளவில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Discussion about this post