ADVERTISEMENT
படியில் தொங்கி சென்ற மாணவர்களுக்கு காவலர் குடுத்த அதிர்ச்சி..!!
வேலூரில் ஆபத்தை உணராமல் பேருந்தின் படியில் தொங்கி சென்ற பள்ளி மாணவர்களுக்கு முதல் நிலை காவலர் அறிவுரை கூறினார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்தில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளனர்.
பள்ளிகண்டா காவல் நிலையம் அருகில் வந்த போது இதனை கண்ட முதல் நிலை காவலர் மணிகண்டன் பேருந்தை நிறுத்தி, படிக்கட்டில் தொங்கியபடி சென்றால் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தாங்கள் லட்சியத்தை அடைய இயலாத நிலை ஏற்படும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறி பேருந்து உள்ளே அனுப்பி வைத்தார்.
முதல் நிலைக் காவலரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.