சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் கோவிலில் 2.46 கோடி மதிப்பில் சேவார்த்திகள் இல்லமா..!!
சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் கோவிலில் 2.46 கோடி மதிப்பில் சேவார்த்திகள் இல்லம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் சேவார்த்திகள் இல்லம் கட்டுவதற்கான அடிகல் நாட்டு விழா நடைபெற்றது.
2.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் இக்கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி ரோப்கார் அமைக்கும் பணிகள் ,உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
இந்த நிகழ்வில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)