தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டால் ஆபத்தை உண்டாக்குமா..!!
குழந்தை பிறந்த பின் பல பெண்களுக்கு உள்ள கேள்வி எத்தனை வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். திடீரென தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டால் ஆபத்தை ஏற்படுத்துமா..? உங்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் “மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ தேவி”.
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டால் மார்பகம் சுருங்கி விடும் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விட்டால் மார்பகத்தின் அளவு சுருங்காது.
மார்பக அளவில் ஏற்படும் சில மாற்றங்கள் ஆனது.., நீங்கள் கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொண்ட உணவு கர்ப்பகாலத்தில் எடுத்துக் கொண்ட உணவு போன்றவற்றை பொறுத்தே இருக்கும்.
சில தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொள்ளும், அந்த பாலை எடுத்து விட வேண்டும். கண்டிப்பாக மருத்துவரை அணுகி.., இது தொடர்பாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாத்திரைகள் எடுத்துக்கொண்டால்.., குறுகிய காலத்திலேயே தாய்ப்பால் கட்டுவது குறைந்து விடும். மாத்திரை எடுத்துக்கொள்ள விட்டால் விளைவுகள் பெரிதாகி விடும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் கவனத்திற்கு.., குழந்தை பிறந்த பின் ஆறுமாதம் அல்லது எட்டு மாதம் கழித்து நீங்கள் வேலைக்கு செல்ல தொடங்கி விடுவீர்கள். குழந்தைக்கு 1 1/2 வயது வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
நீங்கள் வேலைக்கு செல்லும் முன் அல்லது வேலை முடிந்த பின் வந்து தாய்ப்பால் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டு இருப்பீர்கள் அதில் தவறில்லை, ஆனால் இடைப்பட்ட நேரத்தில் குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலை சேகரித்து வைத்து விட்டு செல்லுங்கள்.
இதனால் உங்களுக்கு பாலும் காட்டாது, குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி