நாதுலா மலைப்பாதையில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு நாட்டையே உலுக்கக்கூடிய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் மாநிலம் நாதுலா மலைப்பகுதியில் இன்று மதியம் 12.20 மணி அளவில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. காங்டாக்கிலிருந்து நாதுலா சாலையை இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையின் 14வது மைலில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் மரணமடைந்த நிலையில், இதுவரை 22 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 11 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் 80 பேர் பனிச்சரிவில் சிக்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர் .மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மலைப் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது என விதிமுறைகள் உள்ளதாகவும், ஆனால், அந்த விதிகளை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | Rescue operation underway at 14th mile on Jawaharlal Nehru road connecting Gangtok with Nathula after an avalanche strikes the area in Sikkim
22 tourists who were trapped in snow have been rescued. 350 stranded tourists and 80 vehicles were rescued after snow clearance… pic.twitter.com/kkV85NFWI5
— ANI (@ANI) April 4, 2023
Discussion about this post