பாவங்கள் நீங்க மோடி சோப்பா..? தேர்தல் பரப்புரையில் ப.சிதம்பரம் விமர்சனம்..!!
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் இந்தியா முழுவதும் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் :
திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில்
கரூர் – ஜோதிமணி
விருதுநகர் – மாணிக்கம் தாகூர்
சிவகங்கை – கார்த்தி சிதம்பரம்
கன்னியாகுமரி – விஜய் வசந்த்
கடலூர் – விஷ்ணு பிரசாந்த்
கிருஷ்ணகிரி – கோபிநாத்
நெல்லை – ராபர்ட் புரூஸ்
மயிலாடுதுறை – சுதா
புதுச்சேரி – வைத்தியலிங்கம்
ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் சிவகங்கை வேட்பாளரான, கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மோடி சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி நாம் புனிதமானவர்களாக மாறிவிடலாம்” என விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எந்த வழக்கும் இல்லை யாரும் சிறை சென்றதும் கிடையாது. பாஜகவினர் அனைவரும் உத்தம காந்தி மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என சொல்லும் மோடி. பாஜகவை மோடி சோப்பு மூலம் சுத்தப்படுத்தி அவர்களை புனிதமாக்குகிறார்களே, அது எப்படி..? இந்தியாவிலேயே மிகப் பிரபலமாக அனைவரும் பயன்படுத்துவதும் சோப்பு மோடி சோப்புதான். அந்த சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமானவர்களாக மாறி விடலாம் என கூறியுள்ளார்.
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பிரபுல் படேல் மீது மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ 2017ல் வழக்குப்பதிவு செய்திருந்தது. ஆனால் பிரபுல் படேல் கடந்த 8 மாதங்களுக்கு பாஜகவில் சேர்ந்த பின் சிபிஐ அந்த வழக்கை கைவிட்டுள்ளது.
அதாவது அப்படி ஒரு முறைகேடு நடக்காதது போல் மாற்றியுள்ளது. “பிரபுல் படேல் தவறு செய்திருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது. எனவே பிரபுல் படேலுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டிருப்பதாகவும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.