வருண்குமார் மனைவி, குழந்தைகள் மீது ஆபாச பதிவு செய்த சீமான்..!! ஐபிஎஸ் வருண்குமார் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட நாதக பொறுப்பாளர்கள் 2 பேர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட நாதக பொறுப்பாளர்கள் 2 பேர் மீது மானநஷ்ட வழக்கு தொடர போவதாக திருச்சி எஸ்பி வருண்குமார் நேற்று தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் கூறியுள்ளதாவது
கடந்த ஒரு வருடமாக திருச்சியில் எஸ்பியாக பணியாற்றி வருகிறேன். எனது 13 ஆண்டு கால ஐபிஎஸ் வாழ்க்கையில் நல்ல பெயரையும்., உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளையும் வாங்கி இருக்கிறேன்., இப்படி இருக்க கடந்த 2021ம் ஆண்டு யூடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சியின் பின்புலத்தில் இருந்த ஒருவர் பொய்யான செய்திகளைப் பரப்பி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார்.
அப்போது, திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருந்த நான் அந்த யூடியூபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தேன். அதன் மீண்டும் அந்த யூடியூபர் சில அவதூறு தகவல்களை பதிவு செய்து சர்ச்சையை கிளம்பியதால் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்..
சட்டதிற்கு புறம்பாக செயல்பட்ட அந்த யூடியூபர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இதற்கு முன் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் என்னை கடுமையாக (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) விமர்சித்து பேசினார்கள். அதற்கு எதிராக சில சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு நோட்டிஸ் எனது வழக்கறிஞர் மூலம் சீமானுக்கு அனுப்பினேன். அதற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வார்த்தைகளை சமூக வலைத்தளங்களில் பரபரப்ப தொடங்கினார்கள்..
அதன் பின் நாதக கட்சியின் தூண்டுதலின் பெயரில் வெளிநாடுகளில் உள்ள நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டுள்ளனர்., நான் கொடுத்த 3 புகார்களில்., நாதக மீது 3 குற்ற வழக்குகள் பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நானும், எனது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ்சும் தமிழ்நாட்டில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கியமான திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் எஸ்பிக்களாக பணியாற்றி வருகிறோம்.
ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம் . இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது உறுதி. முக்கியமாக, இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..