சனிதோஷம் நீங்க இந்த பரிகாரம் செய்யுங்க..!
சிலருக்கு வாழ்வில் சனி இருக்கும், ஒரு சிலருக்கு நாவில் சனி இருக்கும்.., சனிபகவானால் ஏற்படும் சனிதோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும், அவர்களுக்கான பரிகார தகவல்.
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று விரதம் இருந்து.., சான் பகவான் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் விளக்கு, அல்லது நெய் விளக்கு அல்லது எள் விளக்கு.. ஏதாவது ஒன்றை இரண்டு அகலில் ஏற்றி தீபம் காட்ட வேண்டும்.
நெய் வைத்தியம் படைத்து, மனம் உருக சனீஸ்வர அஷ்டோத்ர பாராயணம் செய்ய வேண்டும். ஒரு 11 ஏழைகளுக்கு எள்ளில் செய்த அன்னம் தானம் செய்ய வேண்டும்.
இரவில் தூங்குவதற்கு முன், ஒரு ஸ்பூன் அளவிற்கு எள்ளை எடுத்து தலையணை கீழ் வைத்துக் கொண்டு உறங்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும், அந்த எள்ளை எடுத்து வடித்த சாதத்தில் கலந்து, செக்கு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்துக்கொள்ள வேண்டும்.
அதை எடுத்து மூன்று முறை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். திருஷ்டி கழித்த பின் அந்த சாதத்தை காக்காவிற்கு வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 9 நாட்கள் செய்ய வேண்டும்.
9ம் நாள் இரவு பெருமாள் கோவிலுக்கு சென்று.., ஒரு அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி பகவான் மூலம் ஏற்பட்ட தோஷம் நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post