சகாய வில்வ லிங்கேஸ்வரர் அபிஷேகம்
கோவை மாவட்டம் ராம் நகரில் கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு சோமவார விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த செயல்கள் நடக்கும் என்பது உண்மை.
அதன் பெயரில் வைகாசி மாதம் இரண்டாவது வாரத்தில் ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து.., சிவ பெருமான் புஷ்ப அலங்காரத்தில் காட்சி கொடுத்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.