ரசத்துக்கு இருக்கும் எட்டு தோஷம்..? இதனால் உடலில்..!
ரசத்துக்கு எட்டு தோஷம் உண்டு. அவை சர்ப்பம், வங்கம், கந்தி, வன்னி, சஞ்சலம், மலம், காளம், மந்தம் என்பன. அவற்றை நீக்காமல் அந்த ரச மருந்தை சாப்பிடுபவர்களுக்கு முறையே விரணம், பெருவியாதி, நீச்சுவாலை, தபித்தல், உதிரப்பசையற்ற தேக நிறம், வீரிய நாசம், மரணம், சோபம் ஆகியவை உண்டாகும்.
சிவ வீரியம் என்னும் ரசத்தை பற்றி ஜீவ ரட்சாகுர்த நூலில் கூறிய முறைப்படி செய்யத்தக்க சுத்தியெல்லாம் செய்து பிரயோகித்தால் நேத்திர நோய், நரம்புக்கிரந்தி, அஷ்ட குன்மம், கீல் பிடிப்பு, மகா விரணங்கள்,பெரு வியாதி, வாதம் முதலிய நோய்கள் குறையும்.
பாதரசத்தை சுத்தி செய்யாமல் பிரயோகித்தால் ஏற்படக்கூடிய தோஷங்களாவன: துணியை கிழித்தல், கல்லால் அடித்தல், நீரில் மூழ்கி மூழ்கி எழுதல், மயங்கி விழுதல், தேகத்தில் அழலை உண்டாக்குதல், மாறாமல் வாயில் நீர் ஊறல், வேர்வை பெருகுதல், பிரலாபித்தல் ஆகியன.
பூ படலம், விழிப்புண், குய்ய ரோகப்புண், ஆறாதக்கிரந்திகளும் தீரும்.
சுத்தி செய்யப்பட்ட ரச கற்பூரத்தை நோய்களின் வன்மைக்கு ஏற்றவாறுநல்ல வெல்லத்தில் அளவாக வைத்து ஏழு நாட்கள் சாப்பிட்டால் சகனா வர்த்த வாதப்பிடிப்பு, பித்தம், வயிற்று நோய், சிலேஷ்ம ஊறல், வாதம், சோணித வாதம் ஆகியவை நீங்கும்.
சிவந்த சாதிலிங்கம், அதிசாரம், ரூட்சை, சந்நிபாதம், அற்புதப்புண்,அதிமூத்திரம், காணாவிஷம், இருமல், கரப்பான், சிரங்கு, நுணாக்காய் கிரந்தி, குண்டல குஷ்டம், சாமை சரீர குத்தல், வாத நோய், அந்தர் முக ரோகங்கள் ஆகியவற்றை விலக்கும்.
சவ்வீரம் :
குன்மம், முறைநோய், மகா வாதங்கள்,கீல்பிடிப்புகள், அரிசோரோகம் ஆகியவை நீங்கும்.
குட்டம், அலஜம், வல்லைக்கட்டி, கவிகை, மகோதரம் குன்மம், குந்த நோய், மகாவிஷம், மேக வியாதி, வாதசுரம், வாதாதி சாரம், சுபகிரகணி, கபாதிக்கம் ஆகியவை நீங்கும்.
ச தாதுக்களில் பிறந்த ஒரு கிருமி, தோல் நோய்கள் ஆகியவை போகும்.
அதிசிக்வா ரோகம், தானாகச்ச கப நோய், குட்ட ரோகம், நடுக்கற்சுரம், காச சுவாசம், துஷ்ட விரணம், ஜலஸ்ராவம், சிரஸ்தாப ரோக ஆகியவை விலகும்.
சிவந்த கல்லைப்போல் இருக்கின்ற அரிதாரத்தை சுத்தி செய்து கிரமமாக உண்டால் குளிர் சுரம், மாவாத ரோகம், சரீரக்குத்தல், தினவு, கிடிபகுட்ட ரோகம் ஆகியவை நீங்கும்.
மடல் அரிதாரத்தில் பலவகை கட்டி என்கிற இரண்டு வித கரடுகளாலும் உடலில் ஊறிய விஷங்கள் நீங்கும்.
சருமக்குட்டம், குளிச்சுரம், அஜகள்ளி காரோகம், சுவாசம், சிலந்தி விஷம் ஆகியவை போகும்.
தமக சுவாசம், காசம், சிலேஷ்ம வாத ரோகம், அட்ட குன்மம் ஆகியவை போகும்.
காசம், ரோக ராஜம், சிலேஷ்ம வாத ரோகம், அட்ட குன்மம் ஆகியவை போகும்.
மந்தார சுவாசம், வாத சுரம், சத்திக்கிற சயம், செய்யான் விஷம், சருமதல குட்டம் ஆகியவை நீங்கும்.
உடல் முழுவதும் பரவுகின்ற பித்த விரணம், கரப்பான், கிரந்தி கூட்டம், மகாவிரணம் ஆகியவை நீங்கும்.
பச்சையாக அரைத்து கடிவாயில் பூசினால் சர்ப்ப விஷம் தீரும். கிரமமாக சாப்பிட்டால் கபசுரம், திரிதோஷம், சந்நிபாதம், துட்டபீநசம், முகபாகம், கீழ்ப்புண் ஆகியவை நீங்கும்.
மகா வாதமும், அலசமும், வாத கப சுரங்களும் ஆகியவை விலகும்.
ரசவன்னி தோஷம், ஆகந்து, விரணம், பிரமேகம், விழிப்பிணி, சந்நி சுரம், புழுவெட்டு, விதாகம், உட்சூடு இரத்த பித்தம் ஆகியவை விலகும். தேஜஸ், குளிர்ச்சி, அழகு, பலம் ஆகியவை அதிகரிக்கும்.
ரூட்சை, சிரங்கு, வாதாதிக்கம், அஜீரணம், மூளை விரணம் ஆகியவை நீங்கும்.
சுரம், நளிர்மேகம், விழி சதை ஆகியவை நீங்கும்.
சுரம், நளிர்மேகம், விழி சதை ஆகியவை நீங்கும்.
இதை சிந்தூரம் செய்து சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும். மகா வாதமும், பல சுரங்களும் போகும்.இவை அனைத்தும் பாஷாண வகைகள் மற்றும் அவற்றால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகும். இதை அறிந்து கொண்டு சிறந்தவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
– வீர பெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..