அதானி விவகாரத்தில் மோடி தொடர்ந்து ஏன் மெளன சாதிக்கிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் அதானி மீது மீண்டும் சர்ச்சை எழுந்ததையடுத்து குழுமத்தின் சரிவுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதுக்குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி,
அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காது ஏன்? .அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்.
அதானியின் பணம் யாருடையது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்?. நாட்டின் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிகாட்டியுள்ளது. அதானியால் இந்தியாவில் உள்ள எதையும் எளிதாக வாங்க முடியும்; இது எப்படி? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.