டெல்லியில் தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பரிக்ஷா பே சர்ச்சா 2023 என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சிக்காக சுமார் 30 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 20 லட்சம் கேள்விகள் பெறப்பட்டுள்ளது.
நிகச்சியில் பேசிய மோடி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு, மதிப்பெண் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும், தாய் தான் செய்யும் மகத்தான பணியால் ஒருபோதும் சுமையாக கருதுவதில்லை எனவும் கூறினார்.
மேலும், உங்கள் அம்மாவின் நேர மேலாண்மையை கவனியுங்கள், அதன்மூலமாக நீங்கள் தேர்வுக்காக எப்படி நேரத்தை பயன்படுத்துவதை தெரிந்து கொள்வீர்கள் என்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்