பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது..!! 10 பேருக்கு சம்மன்..!! லுக் அவுட் நோட்டீஸ்..!
கடந்த சில நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் டிவி சேனல் தொகுப்பாளரும் சினிமா துணை காதாபாத்திர நடிகை ஒருவர் கோவில் அர்ச்சகர் ஒருவர் தன் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக புகார் அளித்திருந்தார், அதில் அவர் கூறியதாவது.
கடந்த 2021ம் ஆண்டு சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக்.., தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டார். பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னோடு சேர்ந்து வாழ்ந்தார்.
நான் கர்ப்பமானதை சொன்னதும் என்னை வற்புறுத்தி கருக்கலையை வைக்க செய்தார்.., பின் ஒருநாள் அவரது விஐபி நண்பர் கெளதம் என ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து.., எனக்கு வெளியே வேலைகள் இருக்கிறது நீ பேசிக்கொண்டு இரு என சொல்லி விட்டு வெளியே சென்றார்.
ஆனால் கெளதம் என்னிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டார்.., இதை பற்றி கார்த்தியிடம் சொன்னபோது அட்ஜெஸ்ட்மென்ட் செய் என சொல்லி சித்திரவதை செய்தார். மேலும் எனக்கே தெரியாமல் என்னை அந்தரங்கமாக புகைபடம் எடுத்து அவரின் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
அப்போதே கார்த்திக்கின் உண்மை முகம் எனக்கு தெரியவந்தது., இவரை பற்றி அவரது அண்ணனிடம் சொன்னபோது கார்த்திக் உடன் இருந்ததற்கு 10லட்சம் போதுமா என கேட்டார். பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த போது கொலை மிரட்டல் விட்டார்கள்.
காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால்.., நேற்று உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும் படி வழக்கு தொடர்ந்தேன். அதன் பெயரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கை (Look out circular (LOC)) குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு பயணம் செல்வதோ அல்லது வெளி நாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறையால் விடுக்கப்படும் சுற்றறிக்கையாகும்.
இந்நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரி கார்த்தியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சகரை சென்னைக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக, காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக் முனுசாமி எத்தனை வருடங்கள் கோவில் அர்ச்சகராக பணிபுரிகிறார்..?
எத்தனை பெண்களிடம் இதுபோன்று நடந்து கொண்டுள்ளார்..? இணையதளங்களில் வீடியோக்கள் பதிவிட பட்டுள்ளதா என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..