G20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரசியா இடையே போர் தீவிரமாகி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலின்ஸ்கி அமெரிக்கா சென்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவிகளை முதலீடு என்று பேசினார். மேலும் ரசியா உக்ரைனின் போரை தீவிர படுத்தி வரும் நிலையில் இந்தியா பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
I had a phone call with @PMOIndia Narendra Modi and wished a successful #G20 presidency. It was on this platform that I announced the peace formula and now I count on India's participation in its implementation. I also thanked for humanitarian aid and support in the UN.
— Володимир Зеленський (@ZelenskyyUa) December 26, 2022
அதை குறித்த பதிவில்,தொலைபேசி மூலம் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய போது, இந்தியாவிற்கும், அவருக்கும் வெற்றிகரமான #G20 தலைமை பதவிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.மேலும், இந்த ஜி 20 மாநாட்டிற்கான தனது சமாதான சூத்திரத்தை அறிவித்தேன், இப்போது அதை செயல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் நம்புகிறேன்.என்றும், இந்தியா உக்ரைனுக்கு ஐ.நா.வில் அளிக்கும் ஆதரவுக்கும் மனிதாபிமான உதவி மற்றும் நன்றி தெரிவித்தேன் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post