அரவிந்தர் ஆசிரமம் நிறுவிய தினத்தை சித்தி தினமாக கடைபிடித்து வருகின்றனர்…
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற அரவிந்தர் ஆசிரமம் நிறுவிய தினத்தை சித்தி தினமாக கடைபிடித்து ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்திற்குள் சென்று தியான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரிக்கு புகழ்சேர்ப்பது இங்குள்ள மகான் அரவிந்தர் வாழ்ந்து மறைந்த இடத்தை அரவிந்தர் ஆசிரமாக நிறுவி, அவரை போற்றி தியானித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆசிரமம் நிறுவும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24ம் தேதி சித்தி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாடுமுழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அவரது சமாதியில் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் அரவிந்தர் மற்றும் அன்னை வசித்த அறை திறக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.