சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு ; கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்..!!
சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்க கோயிலில் வைகாசி மாதம் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். அடிக்கும் வெயிலிலும் மலை ஏறி வழிபாடு செய்தனர்.
இன்று அதிகாலையே தாணிப்பாறையின் அடிவாரத்தில், வெளியூர் பக்தர்கள் குவிந்துள்ளனர். காலை 6:30 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டுள்ளனர். மதியம் 12மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர்.
மாலை 4:30 மணி அளவில் சுந்தர மகாலிங்கம், சந்தின மகாலிங்கம் மற்றும் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளும், தீப ஆராதனையும் நடத்தப் பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், காவலர்கள் மற்றும் வனத்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி