முகத்தை அழகாக்கும் மாதுளை..!
மாதுளைப்பழம் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அதிக பயன் அளிக்ககூடியது.. அதன் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
* மாதுளைப் பழத்தோலை ஸ்கர்ப் ஆக பயன்படுத்தும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளி வராமல் பாதுகாக்கிறது.
* வாரத்திற்கு மூன்று முறை, மாதுளைப் பழம் ஸ்கர்ப் பயன் படுத்தும்பொழுது முகம் என்று பொலிவுடன் இருகச் செய்கிறது.
செய்ய தேவையான பொருட்கள் :
2 ஸ்பூன் மாதுளை பொடி,
1 ஸ்பூன் பழுப்பு சர்க்கரை,
1 ஸ்பூன் தேன்,
1 ஸ்பூன் அவகேடோ எண்ணெய்.
மாதுளை ஸ்கர்ப் தாயர் செய்யும் முறை :
மாதுளைப்பழம் தோலை வெயிலில் காய வைத்து.., அதை பொடி செய்துக் கொள்ளவேண்டும். பின் அதனுடன் 1 ஸ்பூன் பழுப்பு சர்க்கரை, 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் அவகேடோ எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
தயார் செய்த இந்த ஸ்க்ரபை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். பின் நீங்கள் பயன் படுத்தும் டோனர் அல்லது மாய்ஸ்ரைசர் பயன் படுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
– வெ. லோகேஸ்வரி.
Discussion about this post