காவலர் வாகனம் மோதி சிறுமி பலி..!! போராட்டத்தில் ஈடுபடும் திருப்பூர் மக்கள்..!!
திருப்பூரில் காவல் வாகனம் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சாலையில் உள்ள விஜயா புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ், ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு தர்சினி என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. குழந்தையுடன் எப்பொழுது சந்தோஷமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜேஸ்வரி தனது குழந்தை தர்சினியை அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது பின்னால் வந்த காவல் நிலையத்தின் வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. அந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது, தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த ராஜேஸ்வரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு திரண்ட பொது மக்கள் காவல் வாகனத்தை ஓட்டி வந்த ஊர்காவல் படையை சேர்ந்த வீர சின்னன் என்று கூறியுள்ளனர். மேலும் பொது மக்கள் வீர் சின்னனை சிறையில் அடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post