குடியாத்தத்தில் போதை பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது…
குடியாத்தத்தில் போதை பொருட்களை விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பெயரில், குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது மெக்கானிக் கடையில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஐந்து கிலோ போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கார்த்திகேயன், தண்டபாணி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)