தென்காசியில் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, அரசாணை 243-யை திரும்பப் பெற ஆர்ப்பாட்டம்…
தென்காசியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, அரசாணை 243-யை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட புதிய பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக கல்வித்துறை அரசாணை 243 யை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை ரத்து செய்திடவும், நிறுத்திவைக்கப்பட்ட ஊக்க தொகையை வழங்கிடவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)