உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு ஹெலிகாப்டர் மீது தீராத காதல். அவரால் ஹெலிகாப்டர் வாங்க முடியாத நிலையில், தன்னிடத்தில் இருந்த சான்ட்ரோ காரை ஹெலிகாப்டராக மாற்றினார். பின்னர், கார்காப்டர் என்ற பெயரில் சோசியல் மீடியாவில் புகைப்படத்தை பதிவேற்றினார்.
பலரும் தினேஷை பாராட்டி வந்தனர். இதற்காக, பல நாட்கள் உழைத்தார். 4 லட்சம் வரை செலவும் செய்திருந்தார். சாலையில், சென்ற இந்த கார்காப்டரை பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 29ம் தேதி தினேஷின் கால் போலீசிடம் சிக்கியது. காரில் விதிமுறைகளை மீறி பல்வேறு மாற்றங்களை செய்துள்ளதாக கூறி 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும், காரின் பாடியை மாற்றுமளவுக்கு எந்த மாற்றம் செய்தாலும் அதற்கு முறையான அனுமதி பெற வேண்டுமென்றும் மோட்டார் வாகன துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.