தாம்பரம் அருகே காவல்துறையினர்களுக்கு மாமூல் கொடுத்து தான் சார் சுமார் 1.1/2 ஆண்டுகளாக ஸ்பா நிறுவனங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் ஸ்பா எனும் நிறுவனத்தில் விபச்சாரம் நடைபெறுவதாக ரகசிய தகவலின் அடிப்படையில்
திடீரென இன்று விபச்சார பிரிவு போலீசார் ஸ்பா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பின்னர் ஸ்பாவின் உரிமையாளரான அசிஸ்டன்ட் பாஸ்கர் என்பவரை போலீசார் பிடித்து விபச்சார பிரிவு போலீசார் வாகனத்திலேயே தனது செல் போனில் வாக்கு மூலத்தை எடுக்க தொடங்கினர்.
பின்னர் பாஸ்கர் என்பவரின் வாக்கு மூலம் அதிர வைத்தது ஸ்பாவில் சுமார் 1.1/2 ஆண்டுகளாக விபச்சாரம் செய்து வருவதாகவும், இந்நிலையில் இந்த ஸ்பாவில் 3 பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் இந்த விபச்சாரம் நடப்பது தொடர்பாக காவல் உதவி ஆணையர்க்கு மாதம் 30,000 ரூபாய் பின்னர் காவல் சீனிவாசன் ஆய்வாளர்க்கு 15,000 ரூபாய் மாரி முத்து உதவி ஆய்வாளர் 10,000 ரூபாய் மேலும் வர போலீசார்க்கு பணத்தை கொடுத்து கொண்டே வருவதாகவும் தெரிவித்தார்.
ஏழு மாதத்திற்கு முன்பு விபச்சார போலீசார் நேரடியாக வந்து சோதனை செய்து பாஸ்கர் என்பவரை சிறையில் அடைத்தும் பின்னர் வெளிவந்த பிறகு போலீசார் எச்சரித்தும் சென்றுள்ளதாகவும், பின்னர் மறுபடியும் எப்படி நீ இதே தொழில் ஈடுபட்டாய் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போது காவல்துறையினர்க்கு விபச்சாரம் தொழிலில் மாமூல் கட்டிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.