Wednesday, July 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“வைதீஸ்வரரால் அனுப்பப்பட்ட வைத்தியர்”

இந்த செயல் நடந்து முடிந்த பின் அடுத்த பிரதோஷ தரிசனத்திற்காக பெரியவா அருளிக் கொண்டிருந்த ஹாஸ்பெட் நகருக்கு சென்றார் பிரதோஷம் மாமா. அங்கு கைங்கர்யம் செய்யும் ஏகாம்பரம் என்பவர் மாமாவிடம் சொன்ன தகவல் எல்லாரயும் மெய்சிலிர்க்க வைத்தது.

by Veeraperumal
August 5, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

“வைதீஸ்வரரால் அனுப்பப்பட்ட வைத்தியர்”

 

 

 

சாக்ஷாத் பரமேஸ்வரரே மஹாபெரியவாளெனும் திருஉரு கொண்டு அருள்கிறார் என்ற பூர்ண நம்பிக்கையோடு உலகம் இதை முழுமையாக உணரவில்லையே என்ற ஆதங்கத்துடன் பிறவிப் பயனை  அனுபவித்தவர்  பிரதோஷம் மாமா .

அவர்   உத்யோக பந்தத்தில் இருந்தபோது வெளியூர் செல்ல நேர்ந்தது. மனைவியும் உடல்நிலை சரியில்லாத இரண்டு குழந்தைகளும் எழுமூரில் இருக்க அதில் அருணாசலம் என்ற குழந்தைக்கு திடீரென்று கால் முட்டி இரண்டும் எதிர்ப்புறமாக திரும்பிவிட உயிர்போகும் அவஸ்தையில் குழந்தை துடித்து போனான். அவருக்கு யாரும் துணையில்லாத நிலையில் குழந்தையின் அவஸ்தையைக் கண்டு பதைபதைத்து போனாள். என்ன செய்வதென்று தெரியாத நிலை   மாமாவின்  துணைவிக்கு.

உடனே வீட்டில் பூஜையறைக்கு ஓடினாள். அங்கே பெரியவாளின் சன்னதியில் குழந்தையை போட்டு உருக்கமாக “பெரியவாதான் காப்பாத்தணும்” என்று வேண்டியபடி கண்ணீர் சிந்தினார்.

அருகில் இருந்தவர்கள் இதை கேட்டு உதவி செய்ய ஓடிவந்தாலும் அவர்கள் செய்த எந்த உபாயமும்  பலனளிக்காமல் மிக வேதனையுடன் கதறி அழுதான் அந்த குழந்தை. குழந்தையை புத்தூருக்கு அழைத்துச் செல்லும் சாத்யமில்லை. வீட்டிலிருக்கும் மற்றொரு குழந்தையை பார்த்துக் கொள்ள யாருமில்லாத நிலை.

“புத்தூருக்கு  எப்படி குழந்தையை அனுப்பி வைத்தியம் செய்வேன்” என்று மாமி பெரியவாளின் திருஉருவ படத்தின் முன் நின்று முறையிட சர்வவியாபியான அவரின் திருச் செவி  அதை கேட்டு ஆறுதல் தர அங்கேயே வந்து நின்றது போலானது.

அப்படி ஒரு ஆறுதலை தரும் செய்தியை விஜிலென்ஸ் கிருஷ்ணமூர்த்தி எனும் அன்பர் கொண்டு வந்தார்.  “மாமி கவலையே படாதீங்கோ. நீங்க புத்தூர் போகணும்னு அவசியமில்லை. அந்த புத்தூர் டாக்டரே சென்னைக்கு வந்திருக்கார்” என்று ஆச்சர்யமான தகவலை அதே சமயம் சொன்னார்.

முதலில் அவரது இல்லத்திற்க்கே வந்து வைத்தியம் பார்க்க மறுத்து விட்ட டாக்டர் சிறிது நேரத்திற்கு பின் என்ன தோன்றியதோ ஒரு உந்துதலோடு பிரதோஷம் மாமாவின் வீட்டிற்கே வந்து நேரடியாக குழந்தையின் நிலையை கண்டு அதற்கான சிகிச்சை செய்தார். மேலும் சிகிச்சைக்கான பணமும் வாங்க மறுத்துவிட்டார். குழந்தை அதன்பின் சற்றே சகஜநிலையை அடைந்தான்.

இந்த அதிசயம் எப்படி நடந்திருக்கும்? ஏதோ எதேச்சையாக நடந்திருக்கலாமென்று நினைத்துவிட முடியாமல் இது சாக்ஷாத் பரமேஸ்வரரான மஹாபெரியவாளின் லீலை என்பது அதன்பின் நடந்த சம்பவத்தில் உறுதியானது.

இந்த செயல் நடந்து முடிந்த பின் அடுத்த பிரதோஷ தரிசனத்திற்காக பெரியவா அருளிக் கொண்டிருந்த ஹாஸ்பெட் நகருக்கு சென்றார் பிரதோஷம் மாமா. அங்கு கைங்கர்யம் செய்யும் ஏகாம்பரம் என்பவர் மாமாவிடம் சொன்ன தகவல் எல்லாரயும் மெய்சிலிர்க்க வைத்தது.

மஹா பிரபு பெரியவா ஹாஸ்பெட்டில் தங்கியிருந்த சிவன் கோயில் வாசலில் சில நாட்களுக்கு முன் ஒருநாள் இரவு 12 மணிக்கு சம்பந்தமே இல்லாமல் பிரதோஷம் மாமாவின் இரு குழந்தைகளைப் பற்றி அந்த நடுநிசி வேளையில் பேசினாராம். அதாவது குழந்தைகளால் கஷ்டப்படும் பெற்றோர்கள், பெற்றோர்களால் துன்பப்படும் குழந்தைகள் என்று தன் பக்தர்களில் 19 பேர்களைப் பற்றி விரிவாக பேசியபோது இந்த குழந்தைகளின் சிரமங்களையும் விளக்கி கவலைப்படுவதுபோல் தோன்றியதாம்.

வைத்தியநாதனாய் எங்கோ ஹாஸ்பெட்டில் இப்படி குழந்தைகளைப் பற்றி தெய்வம் கவலைப்பட்ட நேரம் சரியாக, இங்கே எழுமூரில் குழந்தை அருணாசலம் வலி தாங்காமல் துடிக்க மாமி பிரபுவின் திருஉருவ பட சன்னதியில் முறையிட்ட அதே நேரம்தான். அதுவும் நடுஇரவு என்பது பேராச்சர்யம்.

இவ்விடத்தில் இல்லாமல் சென்னையில் உருகும் பக்தைக்கு உதவிட சர்வ வியாபியான பெரியவா குழந்தை பற்றி அவரும் கவலைப்பட்டு பேசிக்கொண்டே இருக்கும் போது புத்தூர் டாக்டரை அங்கே அனுப்பிய பெருங்கருணையை எப்படி வியப்பது?

பக்த பராதீனனாக காப்பாற்றி அருளும் கண்கண்ட காருண்ய தெய்வத்தை கண்ணீர் மல்க சரணாகதம் செய்தார் பிரம்ம ஸ்ரீ பிரதோஷம் மாமா.

Tags: #ஆன்மீக கதைகள்#மஹா பெரியவா ஆன்மீக கதைMAHA PERIYAVAMAHA PERIYAVA STORYஆன்மீக சிந்தனைஆன்மீக செய்திகள்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

"கோவா பழங்குடிகளுக்கு தனி சட்டசபை தொகுதி" நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.