Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மக்களின் போராளி ஆம்ஸ்ட்ராங்..! யார் இவர்..? மக்களுக்காக இவர் செய்தது..?

பல  மாவட்டங்களில்  இருந்து  வந்திருந்த நரிக்குறவ தலைவர்களிடம் எப்படி வந்தீர்கள்..? எங்கு தங்கி உள்ளீர்கள்..? சாப்பிட்டீர்களா..?  என கேட்டு  35,000  ரூபாய்  பணத்தை கவரில் போட்டு அந்த தலைவர்களிடம்   கொடுத்து  உங்கள் உரிமை போராட்டத்தை வீரியமாக நடத்துங்கள். 

by logeshwari
July 10, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

மக்களின் போராளி ஆம்ஸ்ட்ராங்..! யார் இவர்..? மக்களுக்காக இவர் செய்தது..?

 

 

 

 

பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில்  பெரும்  அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக பச்சைத் தமிழகம் கட்சியின் தேசிய அமைப்பாளர் யா.அருள் அவர்களை சந்தித்து பேசினோம்.. அப்போது அவர் நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

என் குரல் :

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீங்கள் ஏன் குரல் கொடுக்கிறீர்கள்..? அவரின் பின்னணி தெரியுமா..? என சில ஊடக நண்பர்களும் , தோழர்களும்  கேட்டார்கள்.  அவர்களுக்கு  நான்  அவரை பற்றி   நன்கு  அறிந்ததால் தான் குரல் கொடுக்கிறேன் என  சொன்னேன்.

எப்போதும்   பாதிக்கப்பட்ட   மக்கள்  மத்தியில் இருப்பது தான் அறம். அது தான் ஒரு மனிதரின் பணி.  தனிப்பட்ட  முறையில் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை எனக்கு  பல ஆண்டுகளாக  தெரியும்.

தூய்மை பணியாளர்கள் :

அதிலும் குறிப்பாக அவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த போது தூய்மை பணியாளர்களை  ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்தி சரியான  சம்பளம்  கொடுக்காமல்  தனியாருக்கு  தாரை  வார்த்த  அரசை   எதிர்த்து குரல் கொடுத்தவர்.

அப்போது போராட்டம் நடத்தப்பட்டது. தூய்மை பணியாளர் மத்தியில் பணி செய்தோம். வலுவான சங்கம் இருந்ததால் மறைந்த தூய்மை பணியாளர் முனியம்மா தலைமையில் போராட்டம் நடத்தினோம்.

சென்னை நகரை விட்டு வெளியேற்றம் :

நானும் சில ஆலோசனைகளை சொல்வேன். அதை கேட்டு குறிப்பெடுத்து கொள்வார். பல பிரச்சனைகளை அப்படி பேசி இருக்கிறோம். சென்னை நகரை விட்டு அப்புறப்படுத்திய போது எந்த கட்சி தலைவர்களும் வலுவான போராட்டத்தையோ, குரலையோ முன்னெடுக்காத போது இவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

மறைந்த சக்திதாசன் அய்யா தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து 2006ம் ஆண்டு புரசைவாக்கத்தில்  உழைக்கும் மக்கள் மாமன்றத்தில் ஒரு கூட்டத்தை  ஏற்பாடு  செய்தோம்.

ஜெயலலிதா போராட்டம் :

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பட்டியலின தலைவர்களும், முற்போக்கு தலைவர்களும் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை அனுப்பி அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சொன்னார்.

மண்ணின் பூர்வ குடிகளை சென்னை நகரை விட்டு தொடர்ந்து துரத்தும் நவீன தீண்டாமையை இரண்டு கட்சிகள் தொடர்ந்து  செய்து வருகிறது  அதற்கு எதிராக சட்டப்போராட்டமும், களப்போராட்டத்திலும் மறைந்த ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பங்கு ரொம்ப முக்கியமானது.

கவுன்சிலராக ஆம்ஸ்ட்ராங் :

மக்கள் பிரச்சினைகளை அவர் கவுன்சிலராக இருந்த போது எதற்கும் அஞ்சாமல் மிக துணிச்சலாக பேசியவர். சென்னை அல்லிகுளம் மோர் மார்கெட் விஷயத்தில் அங்கு வியாபாரம் செய்யும் சிறுகடை வியாபாரிகளை அப்புறப்படுத்த காவல்துறை தொடர்ந்து நெருக்கடிகள் கொடுத்தன. அப்போது பெண்ணுரிமை இயக்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் நின்றார். அவரும் சட்ட ரீதியாக சில பணிகளை செய்தார்.

பழங்குடியின போராட்டம் :

ஒரு நாள் கடலூரில் இருளர் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ரோட்டில் மறியல் செய்து கொண்டிருந்தார்கள். அவரோடு நானும் களத்தில் இருந்தேன். என்னோடு அடிக்கடி போனில் பேசி , என் உடல் நலம் குறித்தும் , என் மக்கள் பணி குறித்தும் கேட்பதை  வழக்கமாக  கொண்டிருந்தமையால் அன்றைய தினம் எதார்த்தமாக போன் செய்து எங்க இருக்கமா என்றார்.

அண்ணா   பழங்குடியின  போராட்டம்  என்றேன்.  உடனே கோரிக்கைகளை கேட்ட அவர் அந்த  மாவட்ட கட்சி தலைவர், வழக்கறிஞர்களிடம் பேசி பழங்குடியின மக்களுக்கு உதவிகள் செய்ய  உத்தரவிட்டார்.

அம்பேத்கர் எழுதிய தீர்வுகள் :

நான்   பலமுறை அவரது பெரம்பூர் வீட்டிற்கு சென்றுள்ளேன்.  எப்போ போனாலும்  அரசமைப்பு சட்டத்தின்  உள்ள முக்கிய விஷயங்களையும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய தீர்வுகளையும் சுட்டிக்காட்டி பேசுவார். அரசமைப்பு சட்டத்தை முழுமையாக உள்வாங்கி அதை கரைத்து குடித்து, ஸ்கெட்ச் வைத்து மார்க் செய்து ஒவ்வொரு விஷயத்தையும் புரியும் படி விளக்கி சொல்வார்.

பழங்குடியின மக்களுக்கு உதவி :

இன்னொரு நாள் தமிழ்நாடு பழங்குடி வாகிரிவேல் நரிக்குறவ தொழிலாளர் சங்கம் மூலம் அந்த மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை மனு கொடுத்தோம். அப்போது பொறுமையாக உட்கார்ந்து மனுவை படித்தார். உடனே அவரது கட்சியின் முன்னாள் எம்.பி அம்பேத்ராஜன்,  சுரேஷ்மானே மூலம் பேச நடவடிக்கை எடுத்தார்.

பல  மாவட்டங்களில்  இருந்து  வந்திருந்த நரிக்குறவ தலைவர்களிடம் எப்படி வந்தீர்கள்..? எங்கு தங்கி உள்ளீர்கள்..? சாப்பிட்டீர்களா..?  என கேட்டு  35,000  ரூபாய்  பணத்தை கவரில் போட்டு அந்த தலைவர்களிடம்   கொடுத்து  உங்கள் உரிமை போராட்டத்தை வீரியமாக நடத்துங்கள்.

நான் எப்போதும் உங்கள் கூடவே   இருப்பேன் என்றார். அந்த மக்களுக்கு முகத்தில் அவ்வளவு சந்தோஷம். நம்மையும் ஒரு மனுஷன் மதிச்சு உட்கார வைத்து பேசுகிறாரே என்று எனக்கு நன்றி சொன்னார்கள்.

உப்பள தொழிளார்களுக்கு உதவி : 

ஒரு தடவை மரக்காணம் உப்பளத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக மோகன் என்பவர் என்னிடம் உதவி கேட்டார். நான் உடனே ஆம்ஸ்ட்ராங் அண்ணனை தொடர்பு கொண்டு உங்களை சந்திக்க வேண்டும் என்றேன். வா அருள்மா என்றார். வீட்டுக்கு போனோம். உட்கார வைத்து அவருக்கு அரசமைப்பு சட்டம் கொடுத்து இருக்கும் உரிமைகள் பற்றி பாடம் எடுத்தார்.

ஒவ்வொரு முறை அவர் வீட்டுக்கு போனா இன்னைக்கு நள்ளிரவு தான் என முடிவு செய்து விடுவேன். அன்றைய தினமும் அப்படித்தான் நடந்தது. பிரச்சினைகளை உள்வாங்கிய சமத்துவ தலைவர் உடனே அவரிடம் ரூ 35,000த்தை கையில் கொடுத்து உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்றார். வந்த அவருக்கு ஒன்னுமே புரியல. அருள் சொன்னா உடனே உதவுகிறார் என்றார்.

மறைந்த   தலைவர் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பல்வேறு பதிவுகளை பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ளார்..   அதனை   பற்றி நாளைய   தொகுப்பிலும்  படிக்கலாம்..

– லோகேஸ்வரி.வெ

Tags: BSP ARMSTRONG HISTORYBSP TN UNIT PRESIDENT MURDERபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் மறைவுபோராளி ஆம்ஸ்ட்ராங்
ADVERTISEMENT

Related Posts

நிஜக்கதைகள்

அரசு பியூன் வேலைக்கு 4வது படித்திருந்தால் போதுமா..!!  

நிஜக்கதைகள்

“மழை நீர்” அந்த காலம் முதல் இந்த காலம் வரை..!

நிஜக்கதைகள்

பெண் பார்த்தல்.. வரன்.. குட்டிஸ்டோரி..!

Next Post
MADHIMUGAM NEWS

கர்நாடகாவில் 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு..! சித்தராமையா  அதிரடி  உத்தரவு...!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.