வழி தவறி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
பஹல்காம் விவகாரத்தின் போது, இந்தியாவும் பாகிஸ்தானுக்குமிடையே கடும் டென்ஷன் ஏற்பட்டது. இந்த சமயத்தில் கடந்த 23ம் தேதி எல்லை பாதுகாப்புப்படை வீரர் பூர்ணம் குமார் என்பவர் பணியில் இருந்த போது, தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விட்டார்.
இதையடுத்து, அவரை பிடித்த பாகிஸ்தான் கடந்த 20 நாட்களாக கஸ்டடியில் வைத்திருந்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கியது. பின்னர், இந்த சிறிய போர் 3 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், தான் பிடித்து வைத்திருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் பூர்ணம் குமாரை பாகிஸ்தான் இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைந்துள்ளது. இன்று காலை (மே 14 ) 10.30 மணிக்கு அட்டாரி வாகா எல்லையில் இந்திய வீரர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.