கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹால்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளையான தி ரெசிஸ்டன் ப்ரண்ட் என்ற அமைப்பு செய்துள்ளது. தற்போது, பஹால்காம் தாக்குதலுக்கு மாஸ்டர் மைன்டாக இருந்தவர் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் ஷேக் சஜ்ஜித் குல் என்பது தெரிய வந்துள்ளது. ஜமமு காஷ்மீரில் ஸ்ரீநகரை சேர்ந்த இவர் பெங்களுருவில் எம்.பி.ஏ படித்துள்ளார். பின்னர், கேரளா சென்று லேப் டெக்னிஷியன் படிப்பையும் படித்துள்ளார்.
தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் லேப் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த சமயத்தில்தான் லஷ்கர் இது தொய்பா இயக்கத்துடன் பழக்கம் ஏற்பட்டு பல வழிகளில் அவர்களுக்கு உதவிக்கரமாக இருந்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு டெல்லியில் 5 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துடன் குல் பிடிபட்டார். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. 2017ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானதும் பாகிஸ்தானுக்கு தப்பி விட்டார்.
தொடர்ந்து, 2019ம் ஆண்டு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இவரை தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட் அமைப்புக்கு பொறுப்பாக்கியுள்ளது. இப்போது, இவரது தலைக்கு என்.ஐ. ஏ 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. குல்லின் சகோதரர் ஒரு டாக்டர். ஸ்ரீநகரிலுள்ள மருத்துவமனையில் பணி புரிந்துள்ளார். இவரும் பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாதிகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் உள்ளது.