ஒரே நாடு ஒரே தேர்தல்..! முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம்..
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசு தலைவர் “ராம் நாத் கோவிந்” தலைமையில் மத்திய அரசு ஆலோசனை குழு கூட்டம் ஒன்றை அமைத்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றம் மற்றும் நாடாளு மன்றத்தில் தேர்தல் நடத்தினால்.., தேர்தல் செலவுகள் குறையும் என மத்திய அரசு கூறியது. வருகிற செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவை கூட்டி மத்திய அரசு சரியான முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..