கல்பாக்கம் அதிவேக ஈணுலை திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்
கல்பாக்கம் அதிவேக ஈணுலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.
மகராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு சென்றார்.
பின்னர், கல்பாக்கம் அதிவேக ஈணுலை திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, பாவினி நிறுவனம் உருவாக்கியுள்ள உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையின் ‘கோர் லோடிங்’ பணியை பார்வையிட்டார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, உள்பட 15 ஆயிரம் காவல்துறையினர் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை நந்தனம் ஒஎம்சிஏ மைதானம், விமான நிலையம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், பிரதமர் செல்லும் வழிகள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது
பிரதமர் மோடி வருகையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.