அட இது தெரியாம போச்சே – பழைய சோறு, கம்ப கூழ் சாப்பிட்டா ஆயுள் நீடிக்குமா?
அடிக்கும் வெயிலுக்கு தலை மட்டும் சூடாகிறது, உடலும் வயிறும் கூட சேர்த்து தான் சூடாகிறது. உடலை குளிர செய்ய ஏ.சி முன் நின்றுக்கொள்கிறோம்.
வயிற்றை குளிர செய்ய குளிர் பானங்கள் குடிக்கிறோம். அது மட்டும் போதுமா..?
சில வருடங்களுக்கு முன் நம் முந்தையர்களின் காலை உணவாக இருந்ததே பழைய சோறும், கம்ப கூழும் தான். அதன் அருமை இந்த காலத்தில் இருக்கும் பலருக்கு தெரிவதில்லை.
பழைய சாதம், கம்ப கூழ் பயன் பற்றி அமெரிக்காவே தெரிவித்துள்ளது. 18, 25 வயது இளைஞர்களுக்கு கூட வயிறு சம்மந்த பட்ட நோய் ஏற்படுகிறது. அனால் 80 வயது முதியவர் வலுவாக இருக்கிறார். எப்படி?
காரணம் இது தான். பழைய சோற்றில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்ட்டீரியா, புளிப்பு சுவையை தருகிறது. இதனால் அதிக அளவில் அதில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் காணப்படும்.
வடித்த சாதத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு 3.4மி.கி, பழைய சோற்றில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு 73.91மி.கி. இருக்கும். ஒவ்வொரு உணவிற்கும் ஒரு கால அவகாசம் இருப்பதை போல பழைய சோற்றிக்கும் கால அவகாசம் உண்டு. சோற்றில் நீருற்றியதிலிருந்து 15 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
பழைய சோற்றின் நன்மைகள் :
* இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நோய் வராமல் தடுக்கும்.
* சருமத்தை பிரதிபலிக்கும், எனவே இளமைக்காலம் கூடும்.
* காலையில் பழைய சோற்றை சாப்பிடுவதால், அல்சர் போன்ற வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
கம்ப கூழ் :
கேழ்வரகு கூழ் குடிப்பவர்கள் பெரும்பாலும், விவசாயிகளாகவே இருப்பார்கள். மண்ணின் மம்பட்டி ஊன்றி வலுவுடன் வேலை செய்யவும். வெயிலில் இருந்து காத்துக்கொள்ளவும். இதை சாப்பிடுவார்கள்.
கேழ்வரகில் கால்சியம் அதிகம் காணப்படும். எனவே கம்ப கூழ் குடிப்பதால் எலும்புகள் வலுவூட்டப்படும்.
எலும்பு சார்ந் நோய்கள் வராமல் தடுக்கும், மூட்டு வலி, இடுப்பு வலி, போன்ற நோய்கள்.
மேலும் கேழ்வரகு உடலுக்கு குளிர்ச்சி என்பதால் வெயிலில் பருகினால், மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.
முக்கிய குறிப்பாக : சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும். பழைய சோற்றை உண்ணலாமா என கேட்டு கொண்டு சாப்பிடுவது நல்லது.
Discussion about this post