பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் இரு தொகுதிகளில் போட்டியிடும் பிரதமர் மோடி இந்த முறை வடக்கில் ஒரு தொகுதி, தெற்கில் ஒரு தொகுதி என்ற வீதத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்கிறார்கள். இந்த நிலையில் ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருவதால் இங்கு பிரதமர் போட்டியிட்டால் அந்த பகுதி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாறும் என பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்தார்.