இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறிய பாகிஸ்தான் இப்போது, தங்களிடத்தில் ஒரு இந்திய பைலட் கூட கஸ்டடியில் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் கூறியுள்ளதாவது, சோசியல் மீடியாவில் சொல்லப்படுவது போல எந்த ஒரு இந்திய பைலட்டும் கைது செய்யப்படவில்லை. இந்தியா நடத்திய தாக்குதலில் எங்களுக்கு குறைவான அளவே சேதம் ஏற்பட்டது. ஒரு விமானத்தில் சின்ன சேதம் ஏற்பட்டது. 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறுவதில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்திய விமானப்படை அதிகாரி பார்தி கூறுகையில், கண்டிப்பாக பாகிஸ்தானின் சில விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றின் சேதமடைந்த பகுதிகள் இந்தியாவில் விழாமல் தடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய கடற்படை அதிகாரி வைஸ் கமோடர் பிரமோத் கூறுகையில், கராச்சி துறைமுகம் உள்ளிட்டவற்றை தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது. கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் அரபிக் கடலில் தயாராக இருந்தன என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தரப்பில் போர் நடந்து கொண்டிருந்த தருணத்தில் 10 செயற்கைக் கோள்கள் இந்தியாவை உண்ணிப்பாக கண்காணித்து கொண்டிருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.