ரஷ்யா- உக்ரைனை தொடர்ந்து, அடுத்ததாக சீனா – தைவான் இடையே இருக்கக்கூடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் அழிந்து வருகின்றன. மேலும் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,ரஷ்யா- உக்ரைனை தொடர்ந்து, அடுத்ததாக சீனா – தைவான் இடையே இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.
சீனா தற்போது நடக்கும் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை உன்னிப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கவனித்து வருகிறது. அதேநேரத்தில், தைவான் மீதான சீன தாக்குதலை தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால், அமெரிக்கா முட்டாள் தனமாக இயங்குகிறது. எங்கள் தலைவர்கள் திறமையற்றவர்கள். அடுத்ததாக சீனா இதனைத்தான் செய்யப் போகிறது. இது அவர்களின் நேரம் என டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது, அமெரிக்கா கையாண்ட விதத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் நன்றாக கவனித்துள்ளார். எனவே, அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்வதற்கான வாய்ப்பாக இது அமையும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.