தஞ்சாவூரில் 15பெருமாள் கோவில்களில் நவநீத சேவை திருவிழா..!!
கடந்த மே 8ம் தேதி, 89ம் ஆண்டு கருட சேவை பெருவிழா ஆழ்வார் மங்கள சாசனத்துடன், இந்து சமய அறநிலைய துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ ராமானுஜ தரிசனசபை சார்பில் தொடங்கப்பட்டது.
மேலும் 15பெருமாள் கோவில்களில் இருந்தும் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று தொடங்கியது. இந்த திருவிழாவில் வெண்ணாற்றங்கரை நீல மேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிக்குன்றபெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள் மற்றும் மேலவீதி நவநீத கிருஷ்ணன், கீழவீதி வராதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக பெருமாள், பள்ளியக்ஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள், மகர்நோம்பு சாவடி, நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஆகிய கோவில்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பாடு நடைபெற்றது.
இதை தொடர்ந்து அந்தந்த கோவில்களில் இருந்தும் கொடிமரத்து மூலைக்கும், மாட வீதி களுக்கும் சுவாமி வீதிஉலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நவநீத சேவை திருவிழா நாளையுடன் நிறைவடைய போகிறது என்பதையும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.