நத்தம் பகவதி அம்மன் கோவில் திருவிழா..!!
நத்தம் பகவதி அம்மன் கோவிலில் கடந்த மே 15ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மே 16ம் தேதி காலை கந்தன கருப்ப சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
நேற்று காலை பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி மற்றும் முளைப்பாரி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று மதியம் விழாக்குழு சார்பில் அன்னதானமும் நடைபெற்றது. நேற்று இரவு அம்மன் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை அரண்மனை பொங்கல் வைத்தலும், மஞ்சள் நீராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெரும் எனவும் விழா குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.