மதுரையில் நாதக நிர்வாகி படுகொலை..! பரபரப்பான மதுரை..!
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதியின் துணை செயலாளராக இருக்கிறார். இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள வல்லபாய் சாலையில் பாலசுப்ரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது திடீரென அவரை சூழ்ந்த சில மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தல்லாகுளம் காவல் துறையினர் பாலசுப்ரமணியனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுப்பிரமணியம் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலையில் இருப்பதால் இந்த கொலை பழி வாங்கும் நோக்கில் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இக்கொலை நிகழ்ந்துள்ளதால் சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஏராளமானோர். அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை நடந்த இடத்தில் வடக்கு காவல் துணை ஆணையர் மதுகுமாரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாலசுப்பிரமணியன் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ