“வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் அல்ல” காதல் கணவர் அளித்த பேட்டி..!
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும்., நடிகை “வரலட்சுமி சரத்குமார்” கடந்த ஜூலை 10ஆம் தேதி மும்பையின் பிரபல தொழில் அதிபரான “கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ்” என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் தாய்லாந் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் முடிந்த நிலையில், இருவரும் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது நிக்கோலாய் பேசியதாவது, “எல்லோரும் இந்த Press Meet-க்கு வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போது தான் நான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தைக்கு மட்டும் தான் இப்போ எனக்கு அர்த்தம் தெரியும். இனி மும்பை என் வீடு கிடையாது. சென்னை தான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்.
என் பெயர் “நிக்கோலாய் சச்தேவ்” நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்கு பின் வரலட்சுமி என்ற அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என அவர் மாற்றிக்கொள்ள மாட்டார். அவரது பெயர் எப்போதும் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நான் விரும்புகிறேன்.
ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பது தான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமி அவர்களின் பெருமை இனி எனக்கும் சொந்தம். வரலட்சுமி என்னை திருமணம் செய்திருந்தாலும் நான் அவருடைய முதல் காதலனாக இருக்க முடியாது. அவருடைய முதல் காதல் எப்போதும் “சினிமா” மட்டும் தான்.
திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்” என்றார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியதாவது, “நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நிக்கோலாய் சொன்னது போல என்னுடைய காதல் கணவர் அவர். ஆனால், என்னுடைய உயிர் சினிமா தான். அதனால், திருமணத்திற்கு பிறகும் நான் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். என்னை வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி” என கூறினார்.
நடிகர் சரத்குமார் பேசியதாவது, “வரலட்சுமி தான் நிக்கோலாயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். நிக்கோலாயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர். அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். உங்கள் ஆசிர்வாதம் அவர்கள் இருவருக்கும் வேண்டும்”.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..