மணிப்பூரில் மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினரையே உருவான போராட்டம் தற்போது பெரும் கலவரமாக வெடித்துள்ளது.
பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. பதற்றம் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மாநில ஆளுநர் உத்தரவுஉத்தரவிட்டுள்ளார். கலவரத்தை அடக்க மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும் முன்னாள் எம்.பி.யுமான மேரி கோம் கலவரத்தை தடுத்து நிறுத்தும் படி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
“எனது மாநிலமான மணிப்பூர் பற்றி எரிகிறது; தயவு கூர்ந்து உதவுங்கள்” உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post