ADVERTISEMENT
காளான் இப்படி செய்து குடுங்க…குழந்தைகள் மிச்சம் வைக்க மாட்டாங்க..!
காளான் உடலுக்கு மிகவும் நல்லது. இது எளிதில் ஜீரணமாகும் தன்னை கொண்டதால் கருமையான காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட காளான் சூப் செய்து குடுக்கலாம். காளான் மலச்சிக்கலை தடுக்கும். மேலும் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளும். காளானில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
இத்தகைய பெரும்பாலான நன்மைகளை கொண்டுள்ள காளானை எப்படி சுவையாக குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்கலாம் என்று பார்ப்போம்…
தேவையான பொருட்கள்:
-
1 பாக்கெட் காளான்
-
1 பிடி கருவேப்பிலை காய வைத்தது
-
1 டீஸ்பூன் மிளகு தூள்
-
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
-
1 டீஸ்பூன் கரம் மசாலா
-
1 பெரிய வெங்காயம்
-
5 சின்ன வெங்காயம்
-
1 தக்காளி
-
10 சிறிய கீற்று தேங்காய்
-
தேவையான உப்பு
-
1 சிட்டிகை சர்க்கரை
-
3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
-
1 சிட்டிகை மஞ்சள் தூள்
-
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
செய்முறை:
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடவும். பின் அதில் சிறிது சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்அதில் எண்ணெய் பிரிந்து வந்ததும், தக்காளி சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியதும் மேலே சொன்ன அனைத்து மசாலாவையும் சேர்த்து காளானையும் போட்டு வதக்கவும்.
காளான் பாதி வெந்ததும் காய்ந்த கருவேப்பிலை பொடியை சேர்த்து நன்றாக கிளறி விடவும், பிறகு காளானை இறக்கும் சமையத்தில் மிளகுப் பொடி சேர்த்து இறக்கவும்.
ஆறியவுடன் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.