மாமியாரின் கேவலமான பேச்சு.. மனமுடைந்த 4 மாத கர்ப்பிணி.. திவீர விசாரணையில் போலீசார்..!
தென்காசி மாவட்டம், ஆண்டார்குளம் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் கணபதி-மீனா. இவர்களது இரண்டாவது மகள் நந்தினி (21) ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்ததும் இருவரின் பெற்றோர்களும் அவர்களை ஏற்றுக் கொண்டதையடுத்து ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியில் குருநாதனின் தாயுடன் வசித்து வந்தனர்.
தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள நந்தினியை அவரது மாமியார் காஞ்சனா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நந்தினி, தனது தாய் மீனாவிடம் கூறிய நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நந்தினியின் தாய் மீனா ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார். மாமியார் காஞ்சனாவிடம் விசாரணை நடத்துமாறு நந்தினியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நந்தினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மாமியார் காஞ்சனாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான்கு மாத கர்ப்பிணி மாமியார் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்