வேலூர் சதுரங்க சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி
வேலூரில் சதுரங்க சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகளில் திரளான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வேலூர் சதுரங்க சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
இந்த போட்டியினை சதுரங்க சங்க செயலாளர் தினகரன் துவங்கி வைத்தார். இவ்விழாவில் சதுரங்க சங்க தலைவர் ரவீந்திரன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் சான்றுகளையும் வெங்கடேஸ்வரா பள்ளியின் தலைமை ஆசிரியர் நெப்போலியன் வழங்கினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.