வாயால் வடை சுடும் மோடி..!! மயிலாடுதுறையில் உதயநிதி மாஸ் பிரச்சாரம்..!! திருச்சி துரைவைகோ பிரச்சாரம்..!!
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் மக்கள் மனதில் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதே சமையம் கட்சி வேட்பளார்களும் அதற்கு ஏற்றார் போல தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கும்பகோணத்தை மாவட்டமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என உறுதியளித்தார்.
கேஸ் விலையை 10 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்திவிட்டு, தேர்தலுக்காக தற்போது பாஜக அரசு 100 ரூபாய் குறைத்து நாடகம் ஆடுவதாக தெரிவித்த அவர், இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடி சொல்லும் வாக்குறுதி எல்லாமே வாயால் வடை சுடுவதற்கு சமம் என கூறி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அகரப்பட்டி, மேட்டுப்பட்டி, ஆட்டாங்குடி, பாகவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் துரை வைகோவுக்கு ஆதரவாக தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரப்புரை மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது பேசிய அமைச்சர் ரகுபதி, எந்த காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் தாமரை மலரவே மலராது என திட்டவட்டமாக தெரிவித்தார். பின்னர் பேசிய துரை வைகோ, கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது மக்களுக்கு நல்லது செய்வதை போல் நடிப்பதாக விமர்சனம் செய்தார்.
அதனைதொடர்ந்து, புத்தாம்பட்டி, செம்பட்டூர், அரியூர், மாந்தாங்குடி ஆகிய இடங்களில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், துரை வைகோவுக்கு ஆதரவாக தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார்
தேர்தல் பிரச்சாரத்தின்போது துரை வைகோவிற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆள் உயர மாலை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..