துணை முதலமைச்சராக பதவி ஏற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! 5 புதிய அமைச்சர்கள் பதவி மாற்றம்…!!!
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக இன்று பதவி ஏற்கவுள்ளார்.. அதேபோல் முன்னால் அமைச்சர்களான. செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டு. அமைச்சர் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யபடுவார் என பேச்சுக்கள் எழத்தொடங்கியது., கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது “மாற்றம் இருக்கும் ஆனால் ஏமாற்றம் இருக்காது” என பதில் அளித்து இருந்தார்.. அதன் பின்னர் துணைமுதலமைச்சராக., அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பதவி எற்பதர்கான கடிதம் ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கவர்னர் மாளிகையில் நேற்று இரவு ஒரு அறிவிப்பு வெளியானது..
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
அக்கடிதத்தில் குறிபிட்டிருப்பதாவது தமிழக முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து துணை முதலமைச்சராகவும் செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமனம் செய்ய்ப்படவுள்ளார்கள்.
இவர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ளது. மேலும், அமைச்சர்களாக உள்ள மனோ தங்கராஜ் (பால் வளம்), செஞ்சி மஸ்தான் (சிறுபான்மையினர் நலம், வெளிநாட்டு வாழ் தமிழர் நலம்), ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை) ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார்கள். அதோடு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இலாகா மாற்றப்பட்டு, அவர் வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
சுற்றுச்சூழல்துறை அமைச்சராக உள்ள மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன், பல்வளத்துறை மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சராகவும், நிதித்துறை மற்றும் மின்வாரியம், மனித வளத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் நிதித்துறை, தொல்லியல் துறைகளையும் கவனிப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சரவையில் பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை, தங்கம் தென்னரசுவிடம் இருந்த மின்வாரியத்துறை, செஞ்சி மஸ்தானிடம் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை, மதிவேந்தனிடம் இருந்த சுற்றுலாத்துறைக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் செந்தில்பாலாஜி மின்வாரியத்துறைக்கும், கோவி.செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், நாசர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.